மாற்றுத்திறனாளி குழந்தைகள் பொதுக் கல்வி முறையிலிருந்து விலக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக, இந்த குழந்தைகளுக்கான 72 அரசு மற்றும் உதவி நிறுவனங்கள் மூலம் அரசு சிறப்புக் கல்வியை வழங்கி வருகிறது.
22 அரசு சிறப்பு பள்ளிகள் உள்ளன. அவற்றில் பார்வைக் குறைபாடுள்ள மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான ஒவ்வொரு 10 பள்ளிகளும், கடுமையாக கை,கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தலா ஒரு பள்ளியும் உள்ளன.
மாநிலத்தில் செயல்பட்டு வரும் 22 அரசு சிறப்புப் பள்ளிகளில் பூவிருந்தவல்லி (ஆண்கள்) , திருச்சிராப்பள்ளி (பெண்கள்) மற்றும் தஞ்சாவூர் (சிறுவர் மற்றும் பெண்கள்) பார்வையற்றோருக்கான 3 உயர்நிலைப் பள்ளிகளும், தர்மபுரி மற்றும் தஞ்சாவூரில் செவித்திறன் குறைபாடுள்ள 2 பள்ளிகளும் அடங்கும்.